Reseña del libro "En Uyir Ninnadhandro (Part 2) (en Tamil)"
அன்னை, தந்தை, தங்கை என்ற சிறு கூட்டிற்குள், தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கையில், எந்தவித உணர்ச்சிப் போராட்டங்களுக்கும் உள்ளாகாத மென்மையான மனம் படைத்தவள், தளிர்மதி. சிறுவயதிலே தன் பெற்றோரை இழந்து, சுற்றத்தார் ஒதுக்கிவிட, அனைவரிடமும் ஒதுங்கி, உற்றாரின் அன்பையும் உணரமுடியாத, எத்தனை இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தாலும், அவற்றையெல்லாம் தன்னகத்தே மறைத்துக்கொள்ளும் ஆழ்கடல்போல உணர்ச்சிகளற்ற இயந்திரமாக மாறி, தன் தொழில் ஒன்றையே கருத்தாகக் கொண்டவன், அருணன் செழியன். எதிர்பாராத சூழ்நிலையில் கண்கள் கலந்து, கருத்தொருமித்து, ஒருவரை ஒருவர் பிரிந்து மற்றவர் இயல்பாக மூச்சுக்கூட விடமுடியாது என்றளவு காதலில் கரைந்து, ஒருவர் மற்றவரின் அன்பில் திளைத்தவேளை தங்களைச் சுற்றி நடந்த சூழ்ச்சிகளாலும், தடங்கல்களாலும் எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாயினும், காதல் என்ற ஒற்றை கீற்றினால் உயிர்கள் பிணைக்கப்பட்டிருக்க, அனைத்து தடைகளையும் தகர்த்து தங்கள் வாழ்வின் பொருளை அடையும் பயணத்தின் சாரத்தையும், காதலின் பலவித பரிமாணங்களையும், நட்பின் தனித்தன்மையையும், குடும்பத்திலுள்ள உறவுகளின் இயக்கவியல்